தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அரசு பணி வழங்க கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்…, நியமனத் தேர்வு ரத்து செய்யப்படுமா??
இது தவிர கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி ஆகிய இடங்களின் சில பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்த உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.