சர்வதேச T20 உலக கோப்பை தொடரின் பயிற்சி போட்டியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
போட்டிகள் ரத்து:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ICC T20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று இந்த வார இறுதியில் துவங்க உள்ளது. இதில் நேரடியாக களம் இறங்கும் அணிகள் போட்டிக்கு தயாராகும் வகையில் தலா 2 பயிற்சி போட்டிகளில் விளையாட ICC ஏற்பாடு செய்திருந்தது. அந்த வகையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று நியூசிலாந்து அணியுடன் விளையாட இருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கு முன்னதாக நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை குவித்தது. அதன் பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 2.2 ஓவர்களில் 19 ரன்கள் அடித்து விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது.
வேல்டு கப் 2022 குவாலிபயர்..! – வாழ்வா சாவா ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் WI வெற்றி..!!
இதன் காரணமாக இந்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. இது பயிற்சி போட்டி என்பதால் எந்த அணிக்கும் பாதிப்பும் இல்லை. ஆனால் வரும் 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் மழை பொழிய 90% சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தான் தற்போது ரசிகர்களுக்கு அச்சத்தை எற்படுத்தி உள்ளது.