மீண்டும் மீனாட்சியாக மாறிய ரச்சித்தா…!ஒரு வேள சீசன் 4 வரப்போகுதோ!!!

0

விஜய் டிவியின் பேமஸ் சீரியல்களில்  ஒன்றின் மூலம் மக்களுக்கு நன்கு அறிய வந்தவர் ரச்சித்தா. இவர் தற்போது ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் புடவையில் வித விதமாக போஸ் கொடுத்து உள்ளார்.

திரைப்படங்களில் மட்டுமே முதல் இரண்டாவது பாகம் என பார்த்து உள்ளோம். அதை சீரியலில் மெய்ப்பித்தது சரவணன் மீனாட்சி சீரியல். அதாவது இந்த சீரியலின் முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில் சரவணனாகவும் ஸ்ரீஜா மீனாட்சியாகவும் நடித்தனர். இந்த சீரியல் மக்களிடையே வெற்றி மற்றும் வரவேற்பு பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் வெளியானது.

மேலும் ஒவ்வொரு பாகத்திலும் கதையின் நாயகன் சரவணனாக நடித்த நபர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் முதல் சீசன் தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் ரச்சித்தா தான் மீனாட்சியாக நடித்தார். இந்த சீரியலுக்கு பிறகு விஜய் டிவி சீரியல்களில் கொஞ்ச காலத்திற்கு அவரை காண முடியவில்லை. இருப்பினும் இவர் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் டிவி உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்து உள்ளார்.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவியில் ரீ என்ட்ரி கொடுத்தார். சீரியல்கள் மட்டுமல்லாமல் இவர் ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். அவரின் இந்த படங்கள் அந்த அளவுக்கு பேச படவில்லை. இதனால் சீரியல்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இவர் மீண்டும் கன்னட திரையில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தற்போது நடித்து வருகிறார்.

இவ்வாறு சீரியல்கள், திரைப்படங்கள் என ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாவில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட தவறுவதில்லை. அந்த வகையில் தற்போது இவர் சீரியல் ஷூட்டிங் போது புடவையில் வித விதமாக போஸ் கொடுத்து உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here