வீரியம் குறையாத கொரோனா – இன்றும், நாளையும் கூடுதல் கட்டுப்பாடுகள்!!

0
கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் துணி, நகைக்கடைகள் இன்றும் நாளையும் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்ட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வந்தது. இதனால் மாநில அரசு தீவிர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்தது. சில வாரங்களுக்கு முன்பு வரை குறைந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
மேலும் ஒரு நாளிலேயே 30,000ஐ கடந்து கேரளாவில் பதிவாகி வருகிறது. இதனால் கேரளாவின் அண்டை மாநிலங்களான கர்நாடகாவிலும், தமிழ் நாடுக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் கோவையிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் கோவையில் இன்றும் நாளையும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் துணி மற்றும் நகைக்கடைகள் இன்று நாளையும் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை அம்மாவட்டத்தில் பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவிடப்படுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here