கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது, முன்பு போல் கொடூரமான ஆட்சி இருக்காது என தெரிவித்து இருந்தனர். ஆனால் சமீபகாலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் தலிபான்களின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ வெளியே வந்துள்ளது.
ஐபிஎல் 2024: CSK vs DC போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!
அதில் “ஆப்கானிஸ்தானில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை, பொது வெளியில் வைத்து கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மீண்டும் தொடங்கப்படும்.” என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.