மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மதுபானம் விற்க தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

0

புதுச்சேரி மாநிலத்தில் வருகிற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் மதுபானம் விற்க தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இரண்டு நாள் தடை :

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், வருகிற  டிசம்பர் 31ம் தேதி  இரவு 7 மணி முதல் ஜனவரி 1ம் தேதி வரை இரண்டு நாட்கள்  மதுபானம் விற்கக் கூடாது என உத்தரவிட்டார். ஏற்கனவே, விடுதிகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பிரச்சனை இல்லாமல் தங்கி கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பால், புதுவை மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here