கடந்த மார்ச் 2ஆம் தேதி புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் போது, குழந்தை காணாமல் போனதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் தெரிவித்த போது, போலீசார்கள் அலட்சியம் காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்., பேரணியை அறிவித்த விவசாயி சங்கங்கள்!!!
பின்னர் மார்ச் 5ஆம் தேதி சிறுமியின் உடலை கண்டறிந்த பிறகு கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிறுமி கொலையில் அலட்சியம் காட்டியதாக முத்தியால்பேட்டை காவல் நிலைய காவலர்கள், அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு மாற்ற, அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். அதோடு ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, இன்று (மார்ச் 7) காலை முதல் விசாரணையை தொடங்கி உள்ளது.