இனி இவர்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு உண்டு.., அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.., முழு விவரம் இதோ!!!

0
ஒவ்வொரு மாதமும் வீட்டு மற்றும் வணிக உபயோக உபயோக சிலிண்டர் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இதனால் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கி வருகின்றனர். தற்போது இதை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இம்மாநிலத்தில் சமீபத்தில் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலருக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது ஹோலி பண்டிகை இன்னும் சில வாரங்களில் வரவுள்ளது. இதனால் உத்திரபிரதேச அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் இல்லத்தரசிகள் ஆதார் எண்ணை இணைத்திருந்தால் அவர்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் இதற்காக ரூபாய் 2,312 கோடி ஒதுக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here