தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் பணத்தை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் பல முக்கியமான விஷயங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் பணத்தைக் கையில் வைத்திருப்பது குறித்தும், அதிகப்படியாக எவ்வளவு தொகையை ஒரு இடத்தில் பணமாகச் செலவு செய்ய முடியும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அதாவது விதிகளின்படி, வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, அது எங்கிருந்து வந்தது, அதை பற்றிய முழுமையான தகவல்கள் இருக்க வேண்டும். ஒருவேளை வருமான வரித்துறையினர் அதிகப் பணத்தைப் பிடித்தால், அந்தப் பணம் எப்படி வந்தது, யாரிடம் இருந்து வந்தது, போன்ற முக்கியமான ஆதாரத்தை நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும். மேலும் உங்கள் கையில் இருக்கும் பணத்திற்குச் சரியான முறையில் கணக்கு, ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், இல்லாத நிலையில் வருமான வரித்துறை பெரும் தொகை அபராதம் விதிக்கும்.