இந்திய நாடானது, அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய மதசார்பற்ற நாடாக திகழ்கிறது. இங்கு தான், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் ஹிஜாப் அணிவது அவர்களது விருப்பம் சார்ந்ததாக உள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு பொறுப்பை தாலிபான்கள் ஏற்ற பிறகு, பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டயமாகினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும், பெண்களுக்கு உயர்கல்வி பெற தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதற்கு எதிராக, பல பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்திய போதும் அதற்கு எவ்வித பலனும் இல்லாமல் போனது. இந்நிலையில், பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்து தாலிபான் அரசு தரப்பில் இருந்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, “பெண்கள் முகத்திற்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. அதனை பொது இடங்களில் ஆண்கள் பார்த்தால் அந்த மதிப்பை அவர்கள் இழக்கிறார்கள். இதனால் தான், பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
121 குழந்தைகள் திருமணம்.., பதைபதைக்க வைக்கும் ஷாக் ரிப்போர்ட்.., வெளிவந்த உண்மை!!