‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மூலம் பான் இந்திய நடிகையாக மாறி இருக்கிறார் பிரபல ஹிந்தி நடிகை சோபிதா துலிபாலா. பாலிவுட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் அன்பை பெற்றுள்ள இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசையை முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார் நடிகை சோபிதா துலிபாலா.
கேங்ஸ்டராக அறிமுகமாகும் துல்கர் சல்மான்….,’கிங் ஆஃப் கோதா’ கேரக்டர்ஸ் ரிவீல்….,
அதாவது, ‘எனக்கு வரக்கூடிய கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு சில ஆசைகள் இருக்கிறது. அவர் வாழ்க்கையில் எந்த அளவுக்கு உயர்ந்தாலும் அடக்கம் உடையவராக இருக்க வேண்டும். அவரிடம் எளிமை, நல்ல குணம், கருணை ஆகியவை இருக்க வேண்டும். எனது வாழ்க்கையின் சிறிய சந்தோஷங்களையும் புரிந்து கொண்டு அதை அனுபவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.