தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த டிசம்பர் 15ம் தேதி மாவட்டந்தோறும் நேர்காணல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்து 3 மாதங்கள் முடிய உள்ள நிலையிலும் பணி நியமனம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் “நீண்ட வருடங்களாக பதவி உயர்வு இல்லாமல் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் புகார் மனு அளித்து இருந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் சீனியாரிட்டி அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி விட்ட பிறகு எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களை நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பதவி உயர்வுக்கு தகுதியுள்ளவர்களில் இதுவரை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்ய மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். எனவே நேர்காணல் தேர்வர்கள் இன்னும் சில காலங்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.