இன்றைய காலகட்டத்தில் திருமணமான புது தம்பதிகள் பலரும் தங்களது எதிர்கால வாழ்க்கையை நினைத்து பல திட்டங்களை முன்கூட்டியே செயல்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்றுதான் வங்கிகளில் கூட்டு கணக்கு சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கணவன் மனைவி இருவரும் ஒரு கணக்கை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த கூட்டு கணக்கு சேமிப்பு திட்டத்தின் நன்மை என்னவென்று பார்த்தால் அதிக வட்டி விகிதம் கிடைக்கும்.
அதே போன்று இரு நபர்களுக்கிடையே பணம் மாற்றுவதை எளிதாக்கும். ஆனால் இந்த கூட்டு கணக்கு சேமிப்பு எல்லா வங்கிகளிலும் நடைமுறையில் இல்லை. மேலும் SBI, ICICI, HDFC, Ujjivan Small Finance Bank, Yes Bank, Kotak Mahindra Bank, RBL Bank, DBS, IndusInd மற்றும் IDFC First Bank போன்ற வங்கிகளில் கூட்டு கணக்கு சேமிப்பை துவங்கலாம்.