தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியகளுக்கான பதவி உயர்வுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர்கள் மாவட்ட கல்வி அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு தான், டெட் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிம் கார்டு பயனாளர்களே., இனி இதுதான் ரூல்ஸ்? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
இதைத்தொடர்ந்து தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஸ்ரீ தேவசேனா அவர்கள், “2024 TET தேர்வு எழுத விரும்பும் ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை.” என கூறியுள்ளார். இது பலர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.