நம் உடலில் மிகவும் சென்சிட்டிவான பகுதி கண் மட்டுமே அதனால் தான் சிறு தூசி கூட கண்ணெரிச்சல் கண் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. எனவே கண்ணை நாம் பாதுகாப்பது முக்கியமான ஒன்றாகும். கண்ணை அடிக்கடி கசக்குவதால் குளுக்கோமா என்ற நோய்கள் வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
குளுக்கோமா
கண்ணை அடிக்கடி கசக்குவதால் தூசிகள் உள்ளேயே தங்கி விடுகின்றனர். இதனால் கண்கள் அதிகம் பாதிப்படைகின்றன. அத்துடன் அந்த தூசிகள் கண்களில் கார்னியாவில் ஒட்டி கீறல்கள் ஏற்படுத்தி அது புண்களாக மாறி அதிக பிரச்னையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குளுக்கோமா கண்களில் ஏற்படும் உயர் அழுத்தத்தின் காரணமாக ஏற்படும். குளுக்கோமா உள்ளவர்கள் அடிக்கடி கண்ணை கசக்குவது பார்வை இழப்பிற்கே கொண்டு செல்லும் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் மருத்துவர்கள்.
மையோபியா
மையோபியா என்பது கிட்ட பார்வை குறைவாக உள்ளதை குறிப்பிடுவது மக்களில் 9.6% பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கண்ணை அடிக்கடி கசக்குவதால் பார்வையை இன்னும் மோசமாக்கும். நாம் கையை வைத்து கசக்குவதால் கையில் உள்ள தூசிகளும் உள்ளே போக வாய்ப்புள்ளது.
பின்பு நம் கண்களில் உள்ளே சிவப்பு அல்லது கருவட்டமாக தொடரும் இது அடிக்கடி கண்ணை கசக்குவதால் ஏற்படும் விளைவாகும். கண்டுகொள்ளாமல் விடுவதால் அது கண்களில் உள்ள நிறத்தை வேறுபடுத்தி காட்டும் தன்மையை செயலிழக்க செய்து விடும். கண்ணை அடிக்கடி கசக்காமல் இருப்பது நல்லது.
டிப்ஸ்
கண்ணை அடிக்கடி கழுவி கொண்டே இருக்க வேண்டும். இதனால் தூசி தங்குவதை குறைகலாம். கண்களை நீருக்குள் வைத்து முழிக்க வேண்டும். கண்களுக்கு அடிக்கடி பயிற்சிகள் அளிக்க வேண்டும. ஒரு காட்டனை வெதுவெதுப்பான நீரில் நனைத்து கண்களில் ஒத்தரமிட வேண்டும். பின் ஆன்டி பயாடிக் சொட்டு மருந்துகளை வாங்கி கண்களில் அரிப்பு ஏற்படும்போது பயன்படுத்தி கொள்ளலாம்.கண்கண்ணாடிகளை பயன்படுத்தும் போது நன்கு துடைத்து விட்டு பயன்படுத்தவும். இவராக செய்து வந்தால் கண்ணை கசக்குவதை குறைக்கலாம்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |