புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
என்ன காரணம்..?
கொரோனா வைரஸ் தான் தங்கத்தின் விலை உயர்வுக்கும் காரணம். என்ன நம்பமுடியலையா..? ஆமா அதான் உண்மை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் கடும் சரிவில் இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பி இருக்கு. இதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரிப்பதால் அதன் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது இதன் விலை குறைந்து உள்ளது.
இன்றைய விலை:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 33,472 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து 4,184 ரூபாய் ஆக உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |