நைட் டைம் போன் பாத்து கண்ணெரிச்சல் இருக்கா.! அப்போ இத பண்ணுங்க.! எவ்ளோ தூரமா இருந்தாலும் தெளிவா தெரியும்.!

0

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போனிலேயே தான் உள்ளனர். இதனால் சின்ன வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலருக்கு கண் எரிச்சலும் ஏற்படுகிறது. வேலை பளுவால் அதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

தீர்வுகள்

கண் பார்வைக்கு கேரட் மிகவும் சிறந்தது. காலையில் கேரட் சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் செய்து குடித்தாலோ கண்பார்வையை மேம்படுத்தும். நம் உணவில் கீரை வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும். பொன்னாங்கனி கீரை கண் பார்வைக்கேற்ற உணவாகும். தினமும் கருவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். கொத்தமல்லியை புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து சட்னி செய்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வர கண் பிரச்சனை குணமாகும்.தினமும் 3 பாதம் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் தூங்க செல்வதற்கு முன் கண்ணில் சொட்டு விளக்கெண்ணெய் ஊற்றி பின் தூங்க செல்ல வேண்டும்.இதனால் கண்ணெரிச்சல் குறையும்.

பயிற்சி

கண்ணிற்கு அவ்வப்போது பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது கண்ணை மேலும் கீழுமாக மற்றும் வலது இடதுமாக சுழற்ற வேண்டும். இதை 5 நிமிடங்கள் செய்ய வேண்டும். இவ்வாறாக ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை செய்து வர வேண்டும். பின்பு ஒரு விளக்கை ஏற்றி அந்த தீபத்தை 15 நிமிடம் தொடர்ந்து கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்து வர கண்ணாடி அணிந்தவர் கூட கண்ணாடியை கழட்டி விடலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here