நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த சூழலில் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பே உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு எதிராக எவ்வித கட்டாய நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள கூடாது.” என நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
RuPay கிரெடிட் கார்டு பயனாளர்களே., இந்த தேதி முதல் புதிய மாற்றம்? NPCI வெளியிட்ட உத்தரவு!!!