இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட நாளான ஜனவரி 26ம் தேதியை ஆண்டுதோறும் குடியரசு தின விழாவாக கொண்டாடி வருகிறோம். அந்நாளில் தலைநகர் டெல்லியில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் ராணுவ அணிவகுப்புடன் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா அல் சிசி-க்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு எகிப்து அதிபர் ராணுவ குழுவுடன் ஜனவரி 24ம் தேதி இந்தியா வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்களே கவனம்.,நாளை மறுநாள் (23.01.2023) இங்கெல்லாம் Power Cut., வெளியான அறிவிப்பு!!
மேலும் இந்த விழாவில் கடற்படையின் ஐ எல்-38 முதல் முறையாக கலந்து கொள்ள இருக்கிறது. இதனால் ராணுவ அணிவகுப்பின் போது போர் விமானங்கள் அணிவகுத்து வானில் வீர சாகசம் செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள 32 ஆயிரம் பார்வையாளர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.