தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். பல BLOCKBUSTER படங்களை கொடுத்த இவர், அரசியலில் களம் இறங்கி தே.மு.தி.க என்ற கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தினந்தோறும் இவர் குறித்த வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற தே.மு.தி.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில் விஜயகாந்தை திருமணம் செய்து கொண்ட நாள் முதல் தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமல்லாமல், அன்னையாகவும் இருந்துள்ளேன் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். இந்தக் கருத்திற்கு ரசிகர்கள் சின்ன சின்னம்மா என்று பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
கேஸ் சிலிண்டர் முன் பதிவில் புதிய மாற்றம்…, அட இது ரொம்ப ஈஸி போலயே…, முழு விவரம் உள்ளே!!