கேரளாவை தொடர்ந்து ஹிமாச்சலில் – கர்ப்பிணி பசுவுக்கு உணவில் வெடிமருந்தால் சிதைந்த வாய்..!

0
Cow
Cow

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடி மருந்து கலந்து கொடுத்து கொன்ற சம்பவமே இன்னும் ஓயாத நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தில் இதே கொடுமை ஒரு கர்ப்பிணி பசுவிற்கு நடந்துள்ளது.

கர்ப்பிணி பசு:

ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜன்துட்டா எனும் பகுதியில் கர்ப்பிணி பசு ஒன்றுக்கு கோதுமை மாவில் வெடி மருந்து கலந்து கொடுத்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. கோதுமை மாவு உருண்டைக்குள் வைக்கப்பட்டு இருந்த வெடி வெடித்த காரணத்தால் பசுவின் வாய் சிதைந்து கடுமையான காயம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மே 26ம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் – கொரோனாவிற்கு பலியானதாக தகவல்..!

தனது பக்கத்து வீட்டுக்காரர் வெடிமருந்து கலந்த கோதுமை மாவு உருண்டையை பசுவுக்கு தந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்து உள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமாவார்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அக்கிராமத்து மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களது பயிர்களை பசு மேய்ந்ததால் அதன் உரிமையாளர் இவ்வாறு செய்ததாக பசுவின் உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கேரளாவில் யானை வெடிமருந்து கலந்த பழத்தை உண்டு இறந்த காரணத்திற்கு 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், பசுவுக்கும் இவ்வாறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here