“என் தோல்விக்கு இது தான் காரணம்”…, செஸ் சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட பிரக்ஞானந்தா அதிரடி பேட்டி!!

0
"என் தோல்விக்கு இது தான் காரணம்"..., செஸ் சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட பிரக்ஞானந்தா அதிரடி பேட்டி!!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவை எதிர்த்து உலகின் நம்பர் 1. வீரரான மேக்னஸ் கார்ல்சன் மோதினார். இந்த போட்டியின் முதல் இரு ஆட்டங்கள் டை பிரேக்கில் முடிந்த நிலையில், 3ஆம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முதல் சுற்றை இழந்த பிரக்ஞானந்தா 2வது சுற்றை போராடி 0.5-0.5 டிரா செய்தார். இருப்பினும், 2 சுற்றுகள் முடிவில் 1.5-0.5 என்ற கணக்கில் கார்ல்சன் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியில், அடைந்த தோல்வி குறித்து இந்தியாவின் பிரக்ஞானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடைசி நாள் ஆட்டத்தின் முதல் சுற்றில் நான் சிறிது தவறுகள் செய்து விட்டேன். 2வது சுற்றில் நான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. ஆனாலும், என்னால் முடிந்த பெஸ்ட்டை கொடுத்தேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், “இந்த செஸ் தொடர் மூலம் பலர், செஸ் விளையாடுவதில் ஆர்வம் காட்ட தொடங்கி விட்டனர். இந்த போட்டிக்கு பிறகு, செஸ் ஜாம்பவான் ஆனந்த் சார், PM மோடி அவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தி உள்ளனர். வாழ்ந்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என்று பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here