இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள், கொரோனாவின் அனைத்து உருமாற்றங்களையும் எதிர்க்கும், அதிக செயல்திறன் மிக்க ஒரு தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிப்பு:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ளது. இந்த வைரசுக்கு எதிராக, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், நோயின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. தற்போது கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியின் செயல்திறனை குறைப்பதாக அறிவியலாளர்கள் எச்சரித்தனர்.
இந்த நிலையில், கொரோனாவின் எந்த வகை உருமாற்றத்தையும் கட்டுப்படுத்தும், அதிக செயல்திறன் மிக்க, ஒரு தடுப்பூசியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கசி நஸ்ருல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சேர்ந்து இந்த செயல்திறன் மிக்க தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்