தமிழக மாணவர்களே.., இந்த 8 கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
தமிழக மாணவர்களே.., இந்த 8 கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
தமிழக மாணவர்களே.., இந்த 8 கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயலை தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் தங்க இடமின்றி, உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 8 பொறியியல் கல்லூரிகளில் டிசம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தது. ஆனால் இந்த கல்லூரிகளில் இப்போது மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக மக்களே.., கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த தேதியில் திறக்கப்படுமா? அமைச்சர் தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here