இன்றைய காலகட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் பல்வேறு விதமான முதலீடு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் தபால் நிலையங்களில் வெளியடப்படும் முதலீடு திட்டங்களையே, பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில் ஆண்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்ட செல்வமகன் திட்டம், பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ஐஸ்கிரீம் வணிகத்தை பிரிக்கும் யுனிலிவர் நிறுவனம்.. 7500 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்?
ஆனால், இத்திட்டம் NRI, அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கு பொருந்தாது. 15 ஆண்டுகால முதிர்வு கொண்ட இத்திட்டத்தில், தற்போதைய வட்டி 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால், 15 வருடத்தில் வட்டியுடன் ரூ.3,15,572 கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் அருகாமையில் உள்ள தபால் நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் எனும் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.