பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து அரசு போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சிறப்பு பேருந்துகள்:
2021-ம் ஆண்டு ஜன.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை வருகிறது. அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கிடையே, தமிழகத்தில் நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை விடுமுறை முன்னிட்டு பல லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்லுவார்கள். கொரானா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. அதன்பின் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் 50% சேவை தொடங்கப்பது. தற்போது 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்தபின்,
ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர்
தற்போது முன்பதிவு நாளை தொடங்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in மற்றும் தனியார் இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.