கவலைப்படாதீங்க… அது கன்ஃபார்ம் உங்களுக்கு இருக்கு – பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்து அமைச்சர் புதிய விளக்கம்!!

0

தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு  பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அமைச்சர் அறிவிப்பு:

தமிழக அரசால் ஆண்டுதோறும், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுடன் சேர்த்து கரும்புத் துண்டு மற்றும் பணப் பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டு, பொங்கல் பொருட்களுடன் சேர்த்து மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு பை வழங்கப்படும் என  தமிழக அரசு நவம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,088 கோடி செலவில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று துவக்கி வைத்தார்.

இது குறித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்த ஆண்டு புதிதாக குடும்ப அட்டை வாங்கியவர்களுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் எனவும், இதனால் புதிதாக ரேஷன் கார்டு வாங்கிய 9 லட்சம் பயனர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார். அதனால் புது ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here