தமிழகத்தில் விமர்சையாக மக்கள் கொண்டாடி வரும் பண்டிகைகளில் ஒன்றாக விளங்குவது தான் பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாளாக போற்றப்படும் பொங்கல் நாளை மக்கள் சந்தோஷமாக கொண்டாட அரசாங்கம் பல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதன் அடிப்படையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை ரேஷன் கடையின் மூலம் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் கடந்த ஆண்டு 2021ம் ஆண்டு பொங்கல் பரிசுகளுடன் 2500 ரொக்க பணமும் கொடுத்த நிலையில், இந்த ஆண்டு வெறும் பரிசு பொருட்களோடு முடித்து கொண்டனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்க நிதி ஒதுக்கிய விவரம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
போலீசாருக்கு பறந்த உத்தரவு.., இனி இதிலெல்லாம் கெடுபிடி கட்டாயம்? இல்லைனா நடவடிக்கை பாயும்!!
அதாவது அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் ரூ. 1,000 ரொக்கம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட 2357 கோடி அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதை ஜனவரி 2ம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.