2017ம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்திற்காக 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தேர்வு முறைகேடு:
தமிழகத்தில் 2017ம் ஆண்டு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு செப்டம்பர் 16ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்த 2 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்து விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தேர்ச்சி அடைந்தவர்களில் 199 பேர் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விசாரணையில் 199 தேர்வர்களுக்கு 50 முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாக அளிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு கண்டறியப்பட்ட பொழுது பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மறுதேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதாக தேர்வு வாரியத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இதனால் 2017ல் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |