PM Kisan Yojana திட்டத்தின் கீழ் கணவன்/ மனைவி இருவரும் பலன் பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
PM Kisan :
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வருடம் தோறும் ரூ.6000 தவணை தொகையை நலிவடைந்த விவசாயிகள் பெற்று பயன்பெற்று வருகின்றனர். சமீபத்தில், இந்த திட்டத்தின் 12 தவணை தொகை விவசாயிகள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்/ மனைவி இரண்டு பேரும் இந்த திட்டத்தின் கீழ் ரூ.6000 தவணை தொகையை பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இருப்பினும் இந்த திட்ட விதிப்படி, குடும்பத்தில் கணவன்/ மனைவி இருவரும் தனித்தனியாக PM Kisan திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது, யாராவது ஒருவர் ( கணவன்/ மனைவி) மட்டுமே தவணை தொகையை பெற தகுதி உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திட்டத்தின் கீழ் தவணை தொகை பெற முயற்சி செய்தால், திட்டத்தின் தவணை தொகையை அரசு அவர்களிடமிருந்து திரும்ப வசூலிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.,, கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!!
மேலும் நிலம் விவசாயி பெயரில் இல்லாமல் அவர்கள் முன்னோர்கள் பெயரில் இருந்தாலோ, அரசு ஊழியர்/ ஓய்வு பெற்றவர், அரசியல் பிரமுகர்கள், உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. மேலும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வக்கீல், tax கட்டும் குடும்பத்தினருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பலன் கிடைக்காது.