நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் வீதம் ரூ.2000, 15 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 16 வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நேரத்தில் 16 வது தவணை வரும் பிப்ரவரி மாதம் கடைசி தேதியில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
ஆனால் அதற்கு முன்பாக மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளையும் e-KYC ஆவண சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள்-KYC சரிபார்ப்பு பணிகளை முடித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஒருவேளை இதை விவசாயிகள் செய்யாவிட்டால் 16 வது தவணை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.