கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் ஹீரோவாக நடித்த 3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். என்னதான் இப்படம் திரையில் வெளியாகி பல வருடங்கள் கழிந்தாலும் மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இதையடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தான் லால் சலாம். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் அண்மையில் திரையில் வெளியானது. இந்து மற்றும் முஸ்லிம் மதத்திற்கு இடையில் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் அமைந்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம். ஆனால் இப்படம் ரசிகர்கள் நினைத்தது போல அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் ஒருவேளை மொய்தீன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்ததற்கு பதிலாக வேறு யாராவது நடித்திருந்தால் மக்கள் இப்படத்தை கொண்டாடி இருப்பார்களோ என்ற எண்ணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் க்கு வந்துள்ளதாம். இதனால் லால் சலாம் படம் பிளாப்பானதற்கு தனது அப்பா தான் காரணம் என தனது நெருங்கிய வட்டாரத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழக மாற்றுத்திறனாளிகளே.., இனி TNPSC மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும்? வெளியான முக்கிய தகவல்!!!