தமிழக மாற்றுத்திறனாளிகளே.., இனி TNPSC மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழக மாற்றுத்திறனாளிகளே.., இனி TNPSC மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும்? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை மற்றும் அரசு வேலைவாய்ப்பில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தற்போது இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டித் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும் அவர்களுக்கு TNPSC மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது பல கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதால் தமிழக அரசு இதற்கு ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here