பாட்னாவில் புரோ கபடி லீக் தொடரின் இறுதி கட்ட லீக் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இந்த லீக் சுற்றில், யு மும்பா அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி போட்டியிட்டது. இதில், தமிழ் தலைவாஸ் அணி, போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, யு மும்பா அணியை ஆல் அவுட் செய்தது. இதையடுத்து பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் 50-34 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு நரேந்தர் தான் மிக முக்கிய காரணமாக இருந்தார். இவர் தனது அட்டகாசமான ரெய்டுகளின் மூலம் 13 புள்ளிகளை குவித்தார். இதன் மூலம் தொடர்ந்து 5 வெற்றிகளை பதிவு செய்த தமிழ் தலைவாஸ் அணியானது புள்ளிபட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
தமிழக மக்களே ரெடியாகி கோங்க.., நாளை இங்கெல்லாம் மின்தடை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!