இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று (பிப்ரவரி 4) தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், குஜராத் அணியின் ராகேஷ் மற்றும் ரோஹித் அதிரடியாக செயல்பட்டு, புள்ளி எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கினர். இதனால், தமிழ் தலைவாஸ் அணி 30 – 42 என்ற புள்ளி வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸிடம் தோல்வியை தழுவியது.
Enewz Tamil WhatsApp Channel
இதனை தொடர்ந்து, பெங்களூர் புல்ஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், பெங்களூர் புல்ஸ் 38-29 என்ற புள்ளி வித்தியாசத்தில் யு மும்பா அணியை வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற இந்த போட்டிகளின் முடிவில், 55 புள்ளிகளுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 4 வது இடத்திலும், பெங்களூர் புல்ஸ் அணி 48 புள்ளிகளுடன் 7 வது இடத்திலும் உள்ளன. இதில், தமிழ் தலைவாஸ் அணியானது, 40 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் உள்ளது.