தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் தற்போது அந்தந்த பள்ளி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க உள்ளது. இதனால் மாணவர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுத்தேர்வில் எந்த ஒரு குளறுபடிகளும் ஏற்படாமல் இருக்க பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பொதுத் தேர்வை முன்னிட்டு 3 ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளிகளின் இயக்குனர்கள் உள்ளிட்ட 38 பேரை மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்துள்ளனர். இவர்கள் தேர்வில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அதை பள்ளிக்கல்வித்துறையிடம் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி., இன்னும் ஆறு மாதம் ஆகுமா? அதிர்ச்சி தகவல்!!!