தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி கடந்த ஜூன் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் உரிமை தொகை திட்டம் தொடங்கி ஐந்து மாத காலமாக உள்ள நிலையில், இதுவரையிலும் மாநிலம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேலானோர் புதிய ரேஷன் கார்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மக்களவை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கருதுகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், கூடுதலாக ஆறு மாதங்களுக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி முடக்கப்பட்டு விடும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அச்சத்தில் உள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட புதிய ரேஷன் கார்டு அச்சிட்டு பணியை, உடனடியாக தொடங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
TNPSC “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மாஸ் அப்டேட்? உடனே யூஸ் பண்ணிக்கோங்க!!!