கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிந்தது. இருப்பினும் ஊரடங்கு காலத்தில் பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித செய்யப்படாமல் இருந்தது. தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 19 காசுகள் உயர்ந்து ரூ.85.31 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 28 காசுகள் அதிகரித்து ரூ.77.84 ஆக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் பலர் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.