தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல சலுகைகளையும், நலத்திட்டங்களையும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலணிகளும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஷூக்களும் அரசால் வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதுவரை அவர்களுக்கு சரியான அளவில் காலணிகள் வழங்கப்படாததால் மாணவர்களுக்கு அது சில நேரங்களில் பத்தாமல் போய்விட்டது. இதனால் இந்த ஆண்டு இதுபோன்று பிரச்சனை நிகழக் கூடாது என்பதற்காக சிறப்பான ஏற்பாடு ஒன்றை செய்துள்ளனர் அதாவது இல்லம் தேடி கல்வி பணியாளர்களை பயன்படுத்தி ஒவ்வொரு மாணவர்களையும் அளவீடு செய்து அவர்களுக்கு தகுந்த காலனி மற்றும் ஷூ வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.