மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை தடையில்லாமல் தொடர்ந்து கிடைப்பதற்கு ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழை நவம்பர் 1ஆம் தேதி முதல் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு ஆதார், வங்கி கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட ஆவணங்கள் மட்டுமல்லாமல் ஓய்வூதிய கொடுப்பனவு எண்ணையும் (PPO) வழங்குவது மிக அவசியம்.
Enewz Tamil WhatsApp Channel
இதில் ஏதேனும் தவறு செய்தால் பென்ஷன் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே EPFO உறுப்பினர் சேவை தளத்தில் பதிவு செய்த பிறகு PPO எண்ணைப் பெற முடியும். அந்த எண்ணை www.cpao.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் லாகின் செய்து CPAO-லிருந்து PPO நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை இது தான்…, முதல்வர் எடுக்கும் நடவடிக்கை என்ன??