தற்போதைய காலகட்டத்தில் விபத்து ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹெல்மெட் போடவில்லை என்றால் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட வாகனம் ஓட்டும் போது காதில் Headset போட கூடாது என்றும், அப்படி Headset அணிந்திருந்தால் 1000 ரூபாய் அபராதம் என்று அறிவித்திருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் காரைக்கால் பகுதியில் காவல்துறை புதிதாக ஒரு சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவருக்கு 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் அப்படி யாரேனும் இந்த தவறை செய்தால் அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து 94892 05307 என்ற நம்பருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பலாம் என்று காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனிஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களே குட் நியூஸ்…, உங்களுக்காகவே சிறப்பு ஏற்பாடு…, வெளியான முக்கிய அப்டேட்!!