தமிழக அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதற்கு ஒன்றிய அரசு எந்த ஒரு ஒப்புதலும் வழங்காததால் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளதாக அரசாணை வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய உயர்வு குறித்து தற்போது வரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. ஒருவேளை இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் பெற்றிருக்கலாம். எனவே இது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என குறிப்பிட்டுள்ளார்.