கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதன் விளைவாக ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுபோக, பல ரயில்கள் கொரோனா படுக்கை வார்டுகளாக மாற்றப்பட்டதால், ரயில் சேவை பெரிய அளவில் பாதிப்படைந்தது. இதனால் சாதாரண பயணிகள் ரயிலில் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு.., அரசு தேர்வுகள் இயக்ககம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!!
இந்நிலையில் கட்டணம் தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது சாதாரண பயணிகள் ரயில்களில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மீண்டும் பழைய கட்டணம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.