தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மார்ச் 1ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் ISC 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கியது. அதன் படி இன்று ISC வேதியியல் தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக கசிந்துவிட்டது. இதனால் இன்று நடைபெற இருந்த தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் ஒத்திவைத்துள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட வேதியியல் தேர்வு, மார்ச் 21ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.