டோக்கியோ பாராலிம்பிக்கில் இன்று என்னென்ன போட்டிகள் நடக்கவுள்ளன…

0
ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று டோக்கியோ பாராலிம்பிக்கில் எந்த எந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். அதே போல் இந்தியா சார்பாக யார் யார் விளையாட இருக்கின்றனர் என்பது குறித்தும் தெரிந்துகொள்ளலாம். இன்று முதல் போட்டி காலை 6 மணிக்கு நடைபெற்றது. அந்த போட்டிகளில் ரூபினா ஏர் பிஸ்டல் என்ற விளையாட்டில் பங்கேற்று விளையாடினார். அதற்கு அடுத்ததாக காலை 7.30 மணிக்கு வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் ராகேஷ் விளையாடினார். இவருக்கு எதிராக மரியன் என்பவர் விளையாட இருக்கிறார். அடுத்த போட்டி காலை 8.30 மணி அளவில் ஏர் பிஸ்டல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் நார்வேல் மனிஷ் மற்றும் தீபக் விளையாடி உள்ளனர். அதற்கு அடுத்த போட்டிகள் மாலை 6 மணி அளவில் நடைபேற இருக்கிறது. பெண்கள் ஷாட் பூட் போட்டியில் ஜாதவ் பாக்யஸ்ரீ விளையாட இருக்கிறார். இது அவருக்கு இறுதி போட்டி ஆகும். இந்த போட்டிக்கு பின்னர் 7-8 மணி அளவில் பெண்கள் டேபிள் டென்னிஸ் மேட்ச் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே நடைபெற இருக்கிறது. அதன் பின், அதிகாலை 3.55 மணி அளவில் ஆண்கள் உயரம் தாண்டுதல் மேட்ச் நடைபெற இருக்கிறது. அதில் மூவர் விளையாட இருக்கின்றனர். இந்த விளையாட்டில் தான் கடந்த போட்டிகளில் தமிழகத்தில் மாரியப்பன் தங்க பதக்கம் வென்று இருந்தார். இந்த முறை அவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக தனிமைபடுத்தப்பட்டுள்ளார். அதனால் இவருக்கு பதிலாக இந்த போட்டிகளில் குமார் ஷரத், வருண் சிங் ஆகியோர் விளையாட இருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here