இனியா கண்ணனிடம் பழகுவதை பார்த்து சந்தேகிக்கும் கோபி – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி குடும்பமும் இணைத்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது இன்றைய எபிசோடில் இனியாவும் கண்ணாவும் பேசிக்கொண்டிருக்க அதனை பார்க்கும் கோபி சந்தகப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ராதிகாவுடன் ரோட்டில் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் கோபியை மூர்த்தி பார்த்து விடுகிறார். இத்தனை நாட்கள் பாக்கியாவை பார்த்து எரிந்து விழும் கோபி இப்படி சிரித்து பேசுவதை மூர்த்தி அதிர்ச்சியாகவே பார்க்கிறார். வீட்டிற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றும் கிளம்புகின்றனர்.

வீட்டிற்கு வரும் மூர்த்தி பாக்கியாவிடம் பேச தனக்கு ஒரு குடும்பம் கிடைத்து விட்டதாக சொல்லி ஆனந்த கண்ணீர் விடுகிறார். அதன் பிறகு அனைவரும் சமாதானம் செய்து அனைவரும் பாக்கியாவின் தொழிலுக்கு ஊக்குவிக்கின்றன. அடுத்ததாக பாக்கியாவின் வீட்டை காட்ட அங்கு எழில் தனது அம்மாவை கூப்பிட கிளம்புகிறார்.

அதனுடன் கோபியின் அப்பாவும் கிளம்புகிறார். அடுத்து இனியாவும் கண்ணனும் பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது முல்லை கதிரும் வந்து இணைந்து கொள்ள கண்ணனும் இனியாவும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து வேகமாக வருகிறார் கோபி. கண்ணனை கேவலமாக பார்க்கிறார். இனியாவை முறைக்கும் கோபி உள்ளே போக சொல்லி மிரட்டுகிறார்.

நிலைமை புரிந்து கதிரும் அமைதியாக இருக்கிறார். உள்ளே சென்ற கோபியிடம் மூர்த்தி பேசிகொண்டுள்ளார். அப்பொழுது கண்ணனை உங்க வீட்டுக்கு தான் அனுப்பலாம்னு இருக்கோம் என்று சொல்ல கோபி முழிக்கிறார். அடுத்ததாக கோபிக்கு கால் வர அங்கிருந்து சென்று விடுகிறார்.

அப்பொழுது ஜீவா ரோடில் பார்த்த விஷயத்தை கேட்கலாமா?? என்று கேட்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைந்தது. எப்படியும் இந்த எபிசோடுக்குள் கோபி பற்றிய உண்மைகள் பாக்கியாவிற்கு தெரிய வர போகிறது. இந்நிலையில் எழில் மற்றும் கோபியின் அப்பா வேறு கிளம்பி வருகின்றனர். அடுத்து என்ன நடக்க போகிறது என்பது தான் ஒரே ட்விட்டாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here