லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய கண்ணன்.., விஷயம் தெரிந்து கொந்தளிக்கும் மூர்த்தி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!

0
லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய கண்ணன்.., விஷயம் தெரிந்து கொந்தளிக்கும் மூர்த்தி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!
லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய கண்ணன்.., விஷயம் தெரிந்து கொந்தளிக்கும் மூர்த்தி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்போது எதிர்பாராத பல ட்விஸ்ட்களுடன் டெலிகாஸ்ட்டாகி வருகிறது. இதில் கஸ்தூரி மூலம் கண்ணன் வட்டிக்கு பணம் வாங்கிய விஷயம் தனத்திற்கு தெரிய வருகிறது. இதனால் தனம், ஐஸ்வர்யா கண்ணன் இருவரையும் கண்டபடி திட்டுகிறார். மேலும் இந்த விஷயம் மூர்த்திக்கு தெரிய வந்தால் அவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் இந்த சீரியலுக்கான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த ப்ரோமோவில் வங்கி மேலதிகாரி ஒருவருக்கு கண்ணன் லஞ்சம் விஷயம் தெரிய வருகிறது. இதனால் அவரை கூப்பிட்டு எச்சரிக்கிறார். மேலும் அந்த அதிகாரி கண்ணன் மேல் உள்ள கோபத்தால் அவரை போலீசில் மாட்ட வைக்கிறார். அதாவது விஜிலென்ஸ் ஆபீசருக்கு போன் செய்து கண்ணன் லஞ்சம் வாங்கியதாக கூறுகிறார்.

தமிழக மக்களே உஷார்.., 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

இந்த விஷயம் தெரிந்து கண்ணனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு அவன் பணம் வாங்கியது தெரிய வருகிறது. பின் அவரை கைது செய்கின்றனர். இந்த விஷயம் டிவியில் வர மூர்த்தி, ஐஸ்வர்யா, தனம் பார்த்து அதிர்ச்சியாகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் கண்ணனின் நிலைமை என்னாகும்?? மூர்த்தி அவரை மீண்டும் ஏற்றுக் கொள்வாரா?? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here