தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இப்போது கோடை மழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
இது தவிர வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.