விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.
பாசத்தில் உருகிய காவ்யா:
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, இந்த தொடரின் புதிய முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா களமிறங்கினார். தற்போது ரசிகர்கள் மத்தியில் ஓரளவு இடம் பிடித்து விட்டார். இவர், தற்போது ஜீவாவின் மகளாக நடித்து வரும் கயல் பாப்பாவுடன் எடுத்து கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ்ஸை அள்ளி வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்