பொதுவாக பாகிஸ்தான் பெண்களுக்கு அந்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இப்படி இருக்கையில் பாகிஸ்தானை சேர்ந்த 18 வயது பெண் இளைஞர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்தாரிடம் கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து அந்த பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்து விடும்படி பஞ்சாயத்தார் உத்தரவிட்டுள்ளனர். அதனால் அந்த பெண்ணை அவரது குடும்பத்தார் கவுரவ கொலை செய்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த போலீசார் அந்த குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணுடன் நடனமாடிய இளைஞர்களை ஊர் பஞ்சாயத்தாரிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர். இதோடு இந்த பெண்ணை போல கவுரவ கொலை செய்யப்பட இருந்த மற்றொரு பெண்ணையும் போலீசார் காப்பாற்றியுள்ளனர்.